பிரண்டை துவையல்
தேவையான பொருட்கள் 

.
தோல் சீவிய பிரண்டை – ஒரு கப்
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – ஒன்று
இஞ்சி – சிறிதளவு
வரமிளகாய் – காரத்திற்கு ஏற்ப
நல்எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
.
செய்முறை
வாணலில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் . பின் பிரண்டையை போட்டு சிறிது அதன் நிறம் மாறும் வரை வதக்கவும் பிறகு புளியும் சேர்த்து வதக்கவும், இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும் . பின் அதே வாணலில் சிறுது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பிறகு ,அரைத்த பிரண்டை விழுதை சேர்த்து, மீதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு பின் இறக்கவும். சுவையான பிரண்டை துவையல் ரெடி . இட்லி,தோசை , மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் .

பிரண்டை, முடக்கத்தான் கீரை நம் நரம்பு, எலும்பு மற்றும் மூட்டுக்கு நல்லது . இயற்கை கொடுத்தை உண்ணுவோம் , ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்போம் .