ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்
*பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் - மனம் திறந்த வைரமுத்து*
ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தும்போது பேசியதாவது.
ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி பணிக்கு செல்வதினால் இல்லத்தை கவனிக்கவும், பிள்ளைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவும், முதியவர்களை பேணவும் ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மேல் நாடுகளில் ஆட்கள் இல்லாமல் ரோபோக்களை பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை வந்து கொண்டிருக்கிறது. நம்மூரில் நல்ல பணியாளர்கள் தொண்டு செய்கிறவர்கள் நமக்கு கிடைக்கிறார்கள்.எனவே உங்கள் இல்லத்துக்கு தேவையான பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிற தொண...









