Wednesday, November 19

சினிமா

*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா*

*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா*

சினிமா
*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா* ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்...
நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய ‘SherifMoves.com’ – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு   இலவச நடனக் கல்வி வழங்கும் புதிய தளம்

நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய ‘SherifMoves.com’ – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு   இலவச நடனக் கல்வி வழங்கும் புதிய தளம்

சினிமா
நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய ‘SherifMoves.com’ – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு   இலவச நடனக் கல்வி வழங்கும் புதிய தளம் Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார். தமிழ் திரைப்படத் துறையிலும், பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியும் பெயர் பெற்றவர் ஷெரிப் மாஸ்டர். கடந்த இருபது ஆண்டுகளாக இளம் நடன திறமைகளை கண்டுபிடித்து, வழிகாட்டி, மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். பொருளாதார  காரணங்களால் பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடனக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் இந்த தளம...
வரும் நவம்பர் 21ஆம் தேதி ‘இரவின் விழிகள்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

வரும் நவம்பர் 21ஆம் தேதி ‘இரவின் விழிகள்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமா
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்...
கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில்  நடைபெற்றது.

கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

சினிமா
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் திராவிட சிந்தனையாளருமான, கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் கலைக்கூடம் மற்றும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை, தி.நகர், வாணி மஹாலில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி, செய்தித் தொடர்பு அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. எஸ்.இளங்கோவன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு, எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் அவர்களின் மகனும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர், திமுக தலைமை நிலைய செயலாளர், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான கலைமாமணி பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, ...
வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !!

வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !!

சினிமா
பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக் !! ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது. இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்.., ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சு...
இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து ‘கொம்புசீவி’ படத்திற்காக பாடியுள்ளனர்

சினிமா
*இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து 'கொம்புசீவி' படத்திற்காக பாடியுள்ளனர்* *ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது* ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கொம்புசீவி' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர். கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி,நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். ய...
கும்கி 2- திரைவிமர்சனம்

கும்கி 2- திரைவிமர்சனம்

சினிமா
பிரபு சாலமன் இயக்கத்தில் மதி , அர்ஜூன் தாஸ் ,ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஹரிஷ் பெராடி மற்றும் பலர் நடித்துள்ள படம் கும்கி 2. மதி என்னும் சிறுவன் மலைப்பாங்கான கிராமத்தில் வாழ்ந்து வருகின்றான் ஒரு சமயம் பள்ளத்தில் மாட்டிக் கொண்ட குட்டி யானை ஒன்றைக் காப்பாற்றும் மதி அதன் மீது மிகவும் பாசம் கொண்டவனாக உள்ளான் யானையும் மதியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும் நேசமும் கொண்டு வளர்ந்து வருகிறார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமயம் அந்த யானை காணாமல் போய்விடுகிறது, காணாமல் போன பாசத்திற்குரிய தன் யானையை தேடி மதி அலைகிறான் .அதன் பின் தன்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி கல்லூரியில் படிக்க வேறு ஊருக்கு செல்கின்றான், சில வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஊருக்கு வரும் மதிக்கு தன்னுடைய யானையைப் பற்றிய ஒரு தகவல் தெரிய வருகிறது ,அதன்படி மீண்டும் தனது யானையை தேடி செல்கிறான்.மதிக்கு அவனது பிரியமான யானை மீண்டும் கிடைத...
’தாவுத்’-திரை விமர்சனம்

’தாவுத்’-திரை விமர்சனம்

சினிமா
" தாவுத் " திரைப்படத்தில் லிங்கா ,சாரா ஆச்சர்,திலீபன் ,ராதாரவி ,சாய் தீனா,அர்ஜெய் ,ஸாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள் ஒளிப்பதிவு - சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த். இசை - ராக்கேஷ் அம்பிகாபதி. மும்பையில் இருக்கும் தாவூத் அங்கிருந்தபடியே தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வர, அந்த தாவுத்தை கண்டுபிடிக்கும் முயற்சியோடு , அவரால் கடத்தப்பட இருக்கும் போதைப் பொருளையும் மீட்கும் முயற்சியில் காவல்துறை எடுக்கும் முயற்சிக்கு அஜய் தலைமை வகிக்கிறார். பல வருடங்களாக தாவித்துடன் வேலை பார்த்து வரக்கூடிய தீனாவும் மற்றவர்களும் அந்த போதை சரக்கினை கபளீகரம் செய்ய திட்டமிடுகிறார்கள் , இந்த சமயத்தில் தாவூத்தின் சரக்கை பத்திரமாக எடுத்துச் செல்ல , வாடகை கார் டிரைவரான லிங்கா தேர்வு செய்யப்படுகிறார். பணத்துக்காக இந்த வேலையில் இறங்கும் லிங்காவால் சரக்கை தாவூத்திடம் கொண்டு போய் சேர்க்க முடிந்தத...
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி- திரைவிமர்சனம்

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி- திரைவிமர்சனம்

சினிமா
ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசிலயா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடிக்க ஏ. எஸ். முகுந்தன் இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி பூங்காவனம் (ஆனந்த்ராஜ் )என்னும் பெயருடைய பிரபலமான தாதா, நகரின் அனைத்து பகுதியிலும் ரௌடி ஏஜெண்ட்களை வைத்துக்கொண்டு தனக்கு வரும் குற்ற செயல்களை செய்து வருகிறார் இப்படி பல குற்ற செயல்களை ஆனந்தராஜ் செய்து வந்தாலும் அவர் மீது எந்தவிதமான குற்ற பதிவு இருப்பதே இல்லை. .ஆனால் அவரை எந்த வகையிலாவது கைது செய்து விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் காவல்துறை அதிகாரியாக சம்யுக்தா இருக்கிறார், இது மட்டுமின்றி தொழில் போட்டி காரணமாக அவர் எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று சிலர் வியூகம் வகுக்கிறார்கள், ஒருபக்கம் ஆனந்த ராஜை கைது செய்துவிட வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சம்யுக்தாவால் அவரை கைது செய்ய முடிந்ததா ?மறுபக்கம் தன்னுடைய தொழில் போட்டியாளர்களிடமிரு...
ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான ‘கெவி’ 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான ‘கெவி’ 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

சினிமா
ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான 'கெவி' 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான 'கெவி' திரைப்படம் கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நீதி மற்றும் தங்கள் வாழ்விற்காகப் போராடும் தம்பதியினரான மந்தாரை மற்றும் மலையன் ஆகியோரின் கதையைச் சொல்கிறது. இந்தப் படம் காதல், எதிர்ப்பு மற்றும் துன்பங்களுக்கு எதிரான சமூகத்தின் போராட்டத்தை மையமாகக் கொண்டது. ஜூலை 18, 2025 அன்று வெளியான இந்தப் படத்தில் ஷீலா, ஜாக்குலின் லிடியா, மற்றும் ஆதவன். எம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அதன் கதைசொல்லல் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பிற்காகவும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது....