நடிகர் மோகன் அவர்களின் பிறந்த நாள் விழா 
80-களின் காலகட்டத்தில் பலவேறு தொடர் ஹிட் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து இன்றைக்கும் அவர்களால் நேசிக்கப்பட்டு வரும், வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்கள் தற்போது மீண்டும் தமிழ் படங்களில், தனது மறுவருகையினை கொடுத்து, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் , அவரது பிறந்த நாளில் சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது,பின்பு ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு மோர், பிரியாணி வழங்கப்பட்டன.
இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் மோகன் அவர்கள் நேரில் வருகை தந்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்… நிகழ்வில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் திரு. ஆர்.தமிழ்ச்செல்வன், முன்னால் தமிழக அரசவை கவிஞரும் மோகன் அவர்களுக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களை தந்த கவிஞர் முத்துலிங்கம் ஐயா மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமத்தினர் செய்து இருந்தனர்.
