பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வெளிவந்துள்ள திரைப்படம், யெல்லோ (Yellow). இந்த திரைப்படத்தில் வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, டெல்லி கணேஷ், லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன், இயக்குநர் பிரபு சாலமன், மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை(பாடல்கள்) -கிளிஃபி கிரிஸ். பின்னணி இசை- ஆனந்த் காசிநாத். ஒளிப்பதிவு அபி ஆத்விக்.

காதலித்த காதலனோடு கடைசி வரைக்கும் ஒன்றாக இருப்போம் என்கிற சந்தோஷத்துல இருக்கிறாங்க பூர்ணிமா ,ஆனா எதிர்பாராத விதமாக அவங்களுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, குடும்ப சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி சில முடிவுகளை எடுக்குறாங்க, வீடு வேலைன்னு வாழ்க்கையில எந்த விதமான சுவாரசியமும் இல்லாம இயந்திரத்தனமாக நாட்களை கடத்திக்கிட்டு போறாங்க, அவருடைய அப்பா ஓரளவுக்கு குணமாகி வர, கடைசி வரைக்கும் கூடவே இருப்பேன்னு சொல்லிட்டு போன காதலன் பிரேக்கப் பண்ற எண்ணத்தோடு மீட் பண்றாரு. அதோட வேற ஒரு பெண்ணையும் திருமணம் செஞ்சுக்க போறாருன்னு தெரிய வருது, அதனால மனமுடைந்து போன பூர்ணிமா அவங்களுடைய அப்பா கிட்ட பேசும் போது சில தெளிவுகள் கிடைக்குது, முக்கியமா இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக சின்ன வயசுல, சொந்த ஊர்ல ஒன்றாக வளர்ந்த ஃப்ரண்டை தேடி கேரளாவுக்கு போறாங்க.அங்க லீலா சாம்சனை தேடி கண்டுபிடிக்கிறாங்க. பூர்ணிமா ரவி எதற்காக வந்திருக்காங்க என்ற விஷயத்தை புரிஞ்சிகிட்ட லீலாசாம்சன் , அவர்களுக்கு ஆறுதல் சொல்றாங்க, அதோட மட்டும் இல்லாம இன்னொரு ஃ பிரண்டை தேடி போற பூர்ணிமா ரவி கிட்ட ஒரு விடுதியில் போய் தங்க சொல்றாங்க விருப்பமில்லாமல் அங்கு தங்கற பூர்ணிமா பல மனிதர்களையும் ,அவர்களுக்குள்ளே இருக்கும் கதைகளையும் கேட்கிறாங்க , அங்க வைபவை சந்திக்கிறாங்க, ரெண்டு பேரும் நண்பர்களா மாற, பூர்ணிமா ரவி இன்னும் ரெண்டு பேரை பாக்க போறேன்னு சொல்றாங்க, கூடவே வைபவும் அவங்களோட பயணிக்க, அதன்பின் அவங்கள தேடி கண்டுபிடிச்சு சந்திச்சாங்களா? இல்லையா ?என்பது தான் ‘யெல்லோ’ படத்துடைய மீதி கதை
பூர்ணிமா ரவி படத்துக்கு கதாநாயகியாக மட்டுமில்லாமல் ஆதிரை கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தக்கூடிய நடிகையாக தன்னுடைய பக்குவமான நடிப்பு அழகாக வெளிப்படுத்தி இருக்காங்க, பல நேரங்களில் இருக்கும் குழப்பங்கள், அதை கடக்க பெரும் தெளிவிலிருந்து கிடைக்கும் சந்தோஷங்கள் என பல்வேறு விதமான நடிப்பை ஒருங்கே சேர்த்து கொடுத்து எல்லோ படத்துக்கு வலு சேர்த்து இருக்காங்க.
படத்துக்கு கதாநாயகனாக ஆதிரை கதாபாத்திரத்திற்கு பக்க பலமாய் வரும் சாய் என்னும் கதாபாத்திரத்தில் வைபவ் முருகேசன் அர்த்தமுள்ள பல வசனங்களை தன் நடிப்பின் மூலமா வெகு இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இவருடைய கதாபாத்திரமும் அதை அவர் வெளிப்படுத்து உள்ள விதமும் நன்கு உள்ளது
பூர்ணிமா ரவியின் அப்பாவாக நடித்துள்ள டெல்லி கணேஷ் தனது அனுபவ நடிப்பினை சிறப்பாக வெளிப்படி த்தியு ள்ளார்,மற்றும் மணி அண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் பிரபு சாலமன் ,லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன் போன்றோரின் நடிப்பும் குறைவின்றி உள்ளது
இயற்கை மிளிரும் காட்சிகளை கண்களுக்கு இனிமை தரும் வகையில் , ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக்.,பாடல்களை பொருத்தமட்டில் கிளிஃபி கிரிஸ் இசையில் ரசிக்கும்படி உள்ளன ,அதேபோல . ஆனந்த் காசிநாத்தின் , பின்னணி இசையும் கதையோடு பயணித்து, காட்சிகளுக்கு சரியான பின்புலத்தை கொடுத்துள்ளது.
எடுத்துக்கொண்ட கதைக்கு தெளிவான திரைக்கதை காட்சிகளை அமைத்து, நல்ல தொழில் நுட்ப கூட்டணியுடன், நிறைவான பயணவழி கதையினை படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி மகாதேவன் .பயண கதையை படமாக எடுப்பதில் பல முக்கியமான விஷயங்களை சரியாக செய்தால் மட்டுமே அந்த படம் சிறப்பானதாக அமையும். இந்தப் படத்தை இயக்கியது அறிமுக இயக்குனராக என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், தொழில்நுட்ப கலைஞர்களோடும், சிறந்த நடிகர்களின் நடிப்போடும், திரைக்கதையை நகர்த்தி இருந்தாலும் ,ஒரு சில இடங்களில் ஏற்படுகின்ற தொய்வுகளை ஆகச் சிறந்த ,ஆழமான, அழுத்தமான கருத்துக்களை கொண்ட வசனங்கள் தனியாக தென்பட்டு இருப்பது , குறைகளை களைந்து படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கு.
‘யெல்லோ’’ -உணர்வுப்பயணம் .
